Connect with us

Cinema News

ஏன்டா டேய் எவன் கெட்டாலும் நான்தான் காரணமா? பொங்கி எழுந்த தனுஷ்..?!

குபேரா படத்தின் ஆடியோ லாஞ்ச்ல தனுஷ் பேசிய பேச்சு பரபரப்பாக இருந்தது. அதுல தனுஷ் என்ன சொன்னாருன்னா, சேகர் கம்முலாவின் இயக்கத்தில் குபேரா படத்தின் முதல் நாள் சூட்டிங் திருப்பதி மலை அடிவாரத்தில் நடந்தது. அதுவும் பிச்சைக்காரன் கெட்டப்.

அதுவும் பர்மிஷன் வாங்காம எடுத்தாங்களாம். கேண்டிட் கேமரா மாதிரி அங்கே இங்கே வச்சி தனுஷை பிச்சைக்காரன் கெட்டப் போட்டு கீழ்த்திருப்பதியில் படம் எடுத்தாங்களாம். அங்கே அதிகமா கூட்டம். அப்படி இருந்தும் சூட்டிங்னு தெரிஞ்சி கூட்டம் அதிகமாகி நிறைய டிராபிக்காகி சேகர் கம்முலா வருத்தம் தெரிவித்தாராம்.

தனுஷ் ஒரு தண்ணீர் மாதிரி. எந்தப் பாத்திரத்துல ஊத்துனாலும் அந்த வடிவமா மாறிடுவாரு. வாழ்க்கையில ஏதாவது ஒரு வகையில ஜெயிக்கணும்னுதான் எல்லாரும் ஓடிக்கிட்டு இருக்கோம். நானும் அப்படித்தான் ஓடிக்கிட்டு இருக்கேன். சில பேரு ஜெயிக்கிறவங்களைப் பத்தி நெகடிவிட்டியா பேசணும். அவங்க மனசைக் காயப்படுத்தணும். சேத்தை அள்ளிப் போடணும். அந்தக் கூட்டம் தொடர்ச்சியாக என் மீது நெகடிவிட்டியாக சாயத்தையும், சேத்தையும் வாரிக்கிட்டே இருக்காங்க.

எங்க அப்பா என்னை சினிமாவுக்குள்ள கொண்டு வந்தாரு. எங்க அண்ணன் எனக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தாரு. அதுக்கு அப்புறம் நானே கரணம் போட்டு இந்த இடத்தை அடைஞ்சிருக்கேன்னு தனுஷ் தெரிவித்துள்ளார்.

ரஜினி வீட்டுல பொண்ணு கட்டுனாருன்ன உடனே இன்டஸ்ட்ரியில பலபேரும் திட்டு திட்டுன்னு திட்டினாங்களாம். இவருக்கு எப்படிய்யா பொண்ணு கொடுத்தாங்கன்னு பலரும் பேசினாங்க. தனுஷூக்கு இங்கிலீஷ் கத்துக் கொடுத்தது, 5 ஸ்டார் ஓட்டலுக்குப் போனா எப்படி நடந்துக்கணும், எப்படி டிரஸ் பண்ணனும்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் ஐஸ்வர்யாதான்.

மகன் பட்டமளிப்பு விழாவில் இருவரும் இணைந்து போஸ் கொடுத்தாங்க. என்னதான் பிரச்சனை என்றாலும் மகன் விஷயத்தில் ஒண்ணு சேர்ந்தது சந்தோஷம். போயஸ் கார்டன்ல ரஜினிக்கு இணையாக அவரையும் தாண்டி பெரிய மாளிகையைக் கட்டிருக்காரு தனுஷ்.

இந்த ஒட்டுமொத்த பொறாமை, காழ்ப்புணர்ச்சி, கடுப்பு தான் என் மீது சேற்றை வாரிப் பூசக் காரணம் என தனுஷ் சொன்னாராம். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சில் இருந்து என்ன தெரிகிறது என்றால் தனுஷ் ஏன்டா எவன் குடும்பம் கெட்டாலும் நான் தான் காரணமா? எவ்வளோடா பொய் சொல்வீங்கன்னு தனுஷ் கேட்பது போல தெரிகிறது. சமீபத்தில் விவாகரத்து பிரச்சனையில் சிக்கிய ஜெயம் ரவி, ஆர்த்தி பிரச்சனைக்கும் காரணம் தனுஷ் தான் என்று பலரும் குற்றம்சாட்டினர். அது மட்டும் அல்லாமல் இன்டஸ்ட்ரியில் இந்த மாதிரி எங்கே பிரச்சனை என்றாலும் தனுஷின் பெயர்தான் அடிபடுகிறதாம். அதற்குப் பதிலடி தான் இதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top