Categories: Cinema News latest news

ரிலீஸுக்கு முன்பே ரஜினி படத்தை பார்த்து கோபப்பட்ட தயாரிப்பாளர்.. ஹிட்டானதும் இயக்குனர்

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர். அதில் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் காலத்துக்கும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் ரசிகர்களின் பெருவாரியான பிரியத்தை சம்பாதித்தவர் இயக்குனர் மகேந்திரன். இவருடைய இயக்கத்தில் அதிகமான படங்கள் இல்லை என்றாலும் இயக்கிய அத்தனை படங்களும் அழுத்தமான சில கருத்துக்களை சொல்லி இருக்கின்றன.

மொத்தமே அவர் இயற்றிய திரைப்படங்கள் 12. உதிரிப்பூக்கள், நண்டு, முள்ளும் மலரும் ,அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து, நெஞ்சத்தை கிள்ளாதே என 12 படங்களை இயக்கியிருக்கிறார். பல படங்களுக்கு கதை எழுதியுள்ளார். திரைக்கதையும் எழுதியுள்ளார். வசனமும் எழுதியுள்ளார் .அது போக படங்களில் முக்கியமான கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.

விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக நடித்தது மகேந்திரன் தான். அவர் இயக்கிய படங்களில் அவருக்கு நல்ல ஒரு வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் முள்ளும் மலரும் ,நெஞ்சத்தை கிள்ளாதே, உதிரிப்பூக்கள் போன்ற படங்கள். இதில் ரஜினி மட்டுமே மகேந்திரன் இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக முள்ளும் மலரும் திரைப்படத்தில் தன்மானம் உள்ள இளைஞனாக காளி என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார்.

தமிழ் சினிமாவில் அந்த கதாபாத்திரத்துக்கு இணையாக எந்த ஒரு கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டதாக தெரியவில்லை. அந்த அளவுக்கு படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இந்த படத்தில் ரஜினிக்கு கை இல்லாமல் போகும். அதை எல்லாம் பார்த்த தயாரிப்பாளர் வேணுசெட்டியார் படமா எடுத்திருக்க? ரஜினி கையை அப்படி வச்சிருக்க? டயலாக் என்பதே இல்லை என மிகவும் கோபப்பட்டு பேசினாராம்.

mahendran

ஆனால் படம் வெளியாகி மாபெரும் ஹிட் ஆக ஒரு பிளாங்க் செக்கை எடுத்து வந்து மகேந்திரனிடம் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொள் என நீட்டி இருக்கிறார் .ஆனால் மகேந்திரன் எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம் என அந்தப் படத்தில் சம்பளமே வாங்கவில்லையாம். இதைப் பற்றி மகேந்திரனின் மனைவி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்