தமிழ் சினிமாவில் இப்போது மிகவும் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிம்பு. அவரது நடிப்பில் நாளை வெளியாகும் திரைப்படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் கமல் , சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி போன்றோர் நடித்த திரைப்படம்தான் தக் லைஃப். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் பாடல்கள் எல்லாம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
படம் நாளை ரிலீஸாகும் பட்சத்தில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி படக்குழு அவர்களின் நன்றியை தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரெங்கநாதனும் வந்திருந்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்ததும் சிம்பு பயில்வான் ரெங்கநாதனின் தோளில் கைப் போட்டு சில மணித்துளிகள் பேசிவிட்டு சென்றார்.
இதுவரை எந்தவொரு முன்னணி நடிகரும் பயில்வான் ரெங்க நாதனுடன் இவ்வளவு நெருக்கமாக பேசி பார்த்ததில்லை. ஆனால் சிம்புவின் இந்த செயல் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பயில்வான் ரெங்கநாதனை பொறுத்தவரைக்கும் எல்லாரையும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சனம் செய்பவர். அதனாலேயே திரைப்பிரபலங்கள் மத்தியில் அவர் மீது ஒரு வெறுப்பான பார்வை இருக்கிறது.
இப்படி இருக்கும் சூழ் நிலையில் சிம்பு அசால்ட்டாக அவர் தோள் மீது கைப்போட்டு பேசியது பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தது. பல பிரச்சினைகளுக்கு பிறகு தக் லைஃப் படம் நாளை ரிலீஸாக இருக்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்புவும் திரிஷாவும் இந்த படத்தின் மூலம் மறுபடியும் இணைந்துள்ளனர். அதனால் இவர்களுக்குள் ரசிக்கும் படியான கெமிஸ்ட்ரி இருக்குமா என்பதுதான் ரசிகர்களின் ஆர்வம்.
TVK VIJAY…
Dhanush: இட்லி…
Vijay: கரூர்…
Kaur: கடந்த…
Vijay TVK:…