Connect with us

Cinema News

அந்த ஒரு விஷயம்.. சும்மா பெல்ட்ட எடுத்து அடிச்சு.. விஜய்சேதுபதி பற்றி மகன் பகீர்

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. இவருடைய மகன் சூர்யா சேதுபதி அடுத்து ஹீரோவாக நடித்த ஃபீனிக்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தை பற்றி புரோமோட் செய்வதற்காக சூர்யா சேதுபதி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். சூர்யா சேதுபதி தன் தந்தை விஜய்சேதுபதியுடன் சிந்துபாத் என்ற படத்தில் நடித்தார்.

அதன் பிறகு ஹீரோவாக ஃபீனிக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் கங்குவா படத்தின் போதே ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் சில பல காரணங்களால் ஃபீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. வரும் ஜூலை மாதம் 4 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்தப் படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய பல முயற்சிகள் எடுத்த நிலையில் ஒரு வழியாக ஜூலை மாதம் படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சூர்யா சேதுபதி பேசும் போது அவர் ஒரு சமயம் நான் வேறு. என் அப்பா வேறு என்ற வகையில் பேசியிருந்தார்.

vijaysethupathi

vijaysethupathi

ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நான் சொல்ல வந்ததே வேறு. அதனால் இனி பேசும் போது மிகவும் ஜாக்கிரதையாகத்தான் பேசுகிறேன் என்றும் தெரிவித்தார். விஜய்சேதுபதி மகாராஜா படம் சமயத்தில் ‘என் மகள் மேல் நான் கையே வைத்ததில்லை.ஆனால் மகனை அடிச்சிருக்கிறேன்’ என கூறியிருந்தார். இதை பற்றி சூர்யா சேதுபதியிடம் கேட்ட போது ஏன் விஜய்சேதுபதி அடித்தார் என்பதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

15 வருடத்திற்கு முன் சூர்யா சேதுபதி ஜிம்முக்கு போகவில்லை. கராத்தே கற்றுக் கொள்ள ஆர்வமில்லை என்ற இரு காரணங்களுக்காக விஜய்சேதுபதியிடம் அடி வாங்கினாராம். அடித்தாலும் செமையா அடிப்பார். பெல்ட்ட வச்சு எல்லாம் அடிச்சிருக்காரு. அவர் அடிக்கும் போது அம்மா தடுக்கவே மாட்டாங்க. அந்தளவுக்கு அடி வெளுப்பார் என சூர்யா சேதுபதி கூறினார். ஆனால் இப்போ அப்படிலாம் கிடையாது என்றும் சூர்யா சேதுபதி கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top