Categories: Cinema News latest news

சூர்யாவுக்கும் பாலாவுக்கும் என்னதான் பிரச்சனை? யார் மேல தப்பு? பிரபலம் சொல்ற தகவல்

நடிகர் சூர்யாவின் நடிப்புத்திறமையை வெளிக்கொண்டு வந்து அவருக்கு ஒரு அபார வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த படம் நந்தா. இந்தப் படத்தை இயக்கியவர் பாலா.

இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு மார்க்கெட் ஏற ஆரம்பித்தது. அந்த வகையில் தமிழ்த்திரை உலகில் சூர்யாவின் வளர்ச்சிக்கு அடிநாதமாக இருந்தவர் என்றால் அது இயக்குனர் பாலா தான். அதன்பிறகு வணங்கான் படத்திற்கும் சூர்யா ஒப்பந்தமானார்.

படத்திற்கான படப்பிடிப்புகளும் சிறிது நாள்கள் நடைபெற்ற நிலையில் திடீரென சூர்யா விலகினார். இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை என்று தெரியவில்லை. அப்போது படத்தைத் தயாரித்தவர் சூர்யா தான்.

இதற்காக பல கோடிகள் செலவு செய்த அவர் தன்னோட வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் பாலா என்பதால் அவருக்காக விட்டுக் கொடுத்தாராம். அதே போல வணங்கான் பட ஆடியோ லாஞ்சுக்கும் நேரில் சென்று பாலாவை கட்டிப்பிடித்து ஆரத்தழுவி உள்ளார் சூர்யா.

அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் என்னதான் பிரச்சனை? இருவரும் காம்ப்ரமைஸ் ஆன மாதிரியே தெரியலையே என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் என்ன பதில் சொல்றாருன்னு பாருங்க.

நந்தா படத்தில் பாலாவின் இயக்கத்தில் பணியாற்றிய சூர்யா வேறு. வணங்கான் படத்தில் பாலாவின் இயக்கத்தில் பணியாற்றிய சூர்யா வேறு. என்னதான் சூர்யாவின் வளர்ச்சியில் பாலாவுக்கு பங்கு இருக்கிறது என்றாலும் அவரது வளர்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு இயக்கி இருந்தாருன்னா அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பிரச்சனையே வந்துருக்காது அப்படிங்கறதுதான் என்னுடைய எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2001ல் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் நந்தா. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை. இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து லைலா, ராஜ்கிரண், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு முன் நடித்த சூர்யாவை இயக்குனர் பாலா அப்படியே மாற்றி மாறுபட்ட ஒரு முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v