">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நடிகை சனத்திற்கு கொலை மிரட்டல்… நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு
தற்போது டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் போட்டியாளராக நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டி பங்கேற்றுள்ளார். அவ்வப்போது தன் வாழ்க்கை பயணத்தில் நடந்ததை மேலோட்டமாக கூறிவந்தார்.
அவரும் கடந்த பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான தர்ஷணை சனம் ஷெட்டி காதலித்து வந்ததும், அதை பிக்பாஸ் வீட்டிலேயே தர்ஷண் உறுதி செய்ததும், பின் இருவரும் நிச்சயதார்த்தமும் செய்துகொண்டார்கள். பின் இருவரும் கருத்துவேறுபாடாகி பிரிந்தது ஊடக விவாதமானது.
இந்நிலையில் சென்னை அடையார் காவல் நிலையத்தில் சனம் ஷெட்டி தர்ஷண் மீது புகார் அளித்திருந்தார். ஆனால் காவல் துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் சனம் வழக்கு தொடர்ந்தார். இதில் தான் கொடுத்த புகார் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்னும் விசாரணையாகவே உள்ளது, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பது, சமூக வலைதளங்களில் இழிவாக பேசுவதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் மனு நேற்று விசாரணைக்கு வர சனம் தாக்கல் செய்து மனு குறித்து மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டதோடு, தர்ஷன் மீது பதிவான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டது.