Connect with us

Cinema News

இதுவாவது தேறுமா?! அப்செட்டில் தனுஷ்.! நம்பிக்கையுடன் செல்வராகவன்.!

செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வெளியான போது போதிய வரவேற்பை பெறுவதில்லை. அந்த சமயம் அந்த படம் புரியவில்லை. அதன் பிறகு அந்த திரைப்படம் பெருமளவு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு பாராட்ட படுகிறது.

அந்த வரிசையில், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் ஏன்ன என நிறைய படங்களை குறிப்பிடலாம். எது என்னவோ பார்வை இழந்த பிறகு சூர்ய நமஸ்காரம் செய்து பிரயோஜனம் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

அதனால், அடுத்த படத்தையாவது வெளியான நேரத்திலேயே ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என செல்வராகவன் முடிவு எடுத்துவிட்டார் இயக்குனர் செல்வராகவன். அதனால் அடுத்த பட நாயகன் தனுஷ், நானே வருவேன் பட ஸ்க்ரிப்டை முழுதாக கேட்டவுடன் உடனே தந்துவிட்டார் செல்வராகவன்.

இதையும் படியுங்களேன் –விஜய்க்கு எதிரான கருத்து.! 100 பேரை திரட்டி சென்ற பாசக்கார தந்தை.!

இதற்கு முன்னர் செல்வராகவன் எந்த ஹீரோவுக்கும் முழு ஸ்க்ரிப்டை கொடுத்தது இல்லை. இதுதான் முதல் முறை என்று கூறுகின்றனர்.

இந்த படாதில் ரசிகர்களை மனதில் வைத்து செல்வர்காவன் கதை எழுதியுள்ளாராம். இரட்டை வேடம் இதுவரை செல்வா செய்தது இல்லை. முதன் முதலாக தனுஷுக்காக இரட்டை வேட கதையை எழுதியுள்ளார். என்ன செய்தாலும் தனுஷுக்கு நம்பிக்கை இல்லையாம். படம் ரிலீஸ் ஆகி முதல் நாள் முடிந்த பிறகு தான் படத்தின் உண்மையாக ரிசல்ட் தெரியும் என காத்திருக்கிறாராம்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top