Connect with us
sivakarthikeyan

Cinema News

சிவா என் தம்பி மாதிரி.. எல்லா நேரத்துலயும் கூட இருப்பேன்! சிவகார்த்திகேயனுக்காக உருகிய தனுஷ்

சிவகார்த்திகேயன் தனுஷ் இவர்களுக்கிடையே பெரிய மோதல் இருப்பதாக சில ஆண்டுகளாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தான் அறிமுகப்படுத்திய ஒருவன் இன்று தன்னைவிட பெரிய உச்சத்தில் செல்லும் போது சிவகார்த்திகேயன் மீது தனுஷுக்கு பொறாமை இருப்பதாக செய்திகள் வந்து கொண்டே இருந்தன. ஆனால் அதெல்லாம் இல்லை. சிவகார்த்திகேயனும் நானும் நல்ல நண்பர்கள் என சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படம் தெளிவு படுத்தியிருக்கிறது.

சின்னத்திரையில் ஒரு ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயனை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தவர் தனுஷ்தான். அதுவும் விஜய் டிவியில் நடந்த விஜய் அவார்ட்ஸ் மூலமாக சிவகார்த்திகேயனின் நகைச்சுவை பார்த்து மூணு படத்தில் ஒரு செகண்ட் ஹீரோவாக நடிக்க வைத்தார் தனுஷ். அப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது சிவகார்த்திகேயனுக்கு நகைச்சுவை கலந்த படம் இருந்தால் சொல்லுங்கள் என பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டார் தனுஷ்.

இதையும் படிங்க:Biggboss Tamil 8: வர்ஷினி ‘பலியாடு’ ஆகிட்டாங்க… எவிக்சன் குறித்து ‘பிரபலம்’ ஓபன் டாக்!

இப்படி சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சிக்கு ஒரு வகையில் தனுஷும் ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்திருக்கிறார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் சிவகார்த்திகேயன். அதுவரை எந்தவொரு விழாவானாலும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஒன்று போல் வர ஒன்றாக உட்கார இப்படித்தான் இருந்தார்கள்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு ஒருவர் வந்தால் இன்னொருவரை பார்க்க முடியாது. அப்படி அவர்களுக்குள் ஒரு விரிசல் ஏற்பட்டது. அதன் பின் இருவரையும் ஒன்றாக பார்க்கமுடிவதில்லை. இப்படி இருக்கும் போதுதான் சமீபத்தில் நடந்த ஆகாஷ் பாஸ்கரன் வீட்டு திருமணத்திற்கு தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் வந்திருந்தார்கள். சிவகார்த்திகேயனை பார்த்ததும் தனுஷ் கட்டியணைத்து அவருடைய அன்பை பரிமாறிக் கொண்டார். அதை பார்க்கும் போது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

dhanush

dhanush

இந்த நிலையில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் சம்பந்தமான பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் தனுஷ் ‘எனக்கு ஒரு தம்பி இல்லையே என பல நாள்களாக வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது சிவா என் தம்பி மாதிரி. இன்றிலிருந்து சிவாவுக்காக என் உயிர், கால், கை என எதுவானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்’ என அந்த மேடையில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: வர்ஷினி ‘பலியாடு’ ஆகிட்டாங்க… எவிக்சன் குறித்து ‘பிரபலம்’ ஓபன் டாக்!

அதோடு ‘ஒரு மேடை இருக்கும். அதுல நான் முதல்ல ஏறுவேன். அப்போது கைதட்டல்கள் வரும். அடுத்ததாக நீங்க ஏறுவீங்க. முதல்ல கேட்ட கைத்தட்டல்களை விட அதிகமான கைத்தட்டல்கள் கேட்கும். அந்த நாள் ரொம்ப தூரம் இல்ல. அதுல கேட்குற முதல் கைதட்டல் என் கையால்தான் இருக்கும்’ என சிவகார்த்திகேயனிடம் அடிக்கடி தனுஷ் சொல்லிக் கொண்டே இருப்பாராம். இதையும் அந்த மேடையில் அந்த நேரத்தில் கூறியிருக்கிறார் தனுஷ். இந்தளவுக்கு சிவகார்த்திகேயன் வளர்ச்சியை ரசித்தவராகவும் அந்த வளர்ச்சிக்கு காத்துக் கொண்டிருந்தவராகவும்தான் தனுஷ் இருந்திருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top