Connect with us
ameer

Cinema News

வாடிவாசல் படத்திலிருந்து விலகும் அமீர்?.. இதற்கு பின்னால் இருக்கும் அந்த நடிகர்!…

கடந்த சில நாட்களாகவே பருத்திவீரன் விவகாரம் பற்றித்தான் பல சினிமா பத்திரிக்கையாளர்கள் ஊடகங்களில் பேசி வருகிறார்கள். அதில் எல்லோரும் அமீருக்கு ஆதரவாகவே பேசுகிறார்கள். அமீர் பக்கம் நியாயம் இருக்கிறது. அவரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏமாற்றிவிட்டார் என்றுதான் எல்லோரும் சொல்லும் கருத்தாக இருக்கிறது.

மற்றொரு பக்கம், இந்த விவகாரம் பற்றி நன்றாக தெரிந்த சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ஏன் இதுபற்றி பேசாமல் மௌனம் காத்து வருகிறார்கள் என்கிற கேள்விகளை அவர்கள் மட்டுமல்ல சமூகவலைத்தளங்களில் பலரும் முன் வைக்கிறார்கள். அமீரிடம் கார்த்தியை ஒப்படைத்தார் சிவக்குமார்.

இதையும் படிங்க: ஷாலினி சொன்ன ஒரு வார்த்தை!.. முரட்டு கோபக்காரரான அஜித் சாதுவாக மாறிய அந்த சம்பவம்!.

படம் துவங்கியபோது அப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா, ஒரு கட்டத்தில் படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டதாக சொல்லி அப்படத்திலிருந்து விலகினார். எனவே, அமீரை சந்தித்த பேசிய சூர்யா ‘இந்த படத்தை நீங்களே தயாரியுங்கள்’ என சொல்ல அமீரும் பல இடங்களில் கடன் வாங்கி அப்படத்தை முடித்தார்.

ஆனால், படம் நன்றாக வந்துவிட்டதால் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அமீரிடமிருந்து அப்படத்தை தன் பெயருக்கு எழுதி வாங்கி கொண்டார் ஞானவேல் ராஜா. அப்போதும் சிவக்குமாரும் சூர்யாவும் அமைதியாகவே இருந்தனர். அதோடு, படம் வெற்றிபெற்றால் அமீர் செலவு செய்த பணத்தை அவருக்கு ஞானவேல் ராஜா கொடுத்துவிட வேண்டும் என ஒப்பந்தமும் போட்டனர். ஆனால், ஞானவேல் ராஜா அதை செய்யவில்லை.

இதையும் படிங்க: 30 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களின் மனதில் பாய்ந்து வரும் மகாநதி!.. அந்த படத்தில் இதை கவனித்தீர்களா?!…

17 வருடங்களாக இதுபற்றி அமீர் எங்கும் பேசவில்லை. இப்போதுதான் அதுபற்றி பேசி வருகிறார். ஒருபக்கம், வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படத்தில் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் அமீருடன் இணைந்து சூர்யா நடிப்பாரா என்பது தெரியவில்லை.

அதனால் ‘என்னால் உங்கள் படத்தில் ஏன் இந்த பிரச்சனை?.. இப்படத்திலிருந்து நானே விலகிக்கொள்கிறேன்’ என வெற்றிமாறனிடம் அமீர் சொல்லிவிட்டாராம். வெற்றிமாறன் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top