">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கண்ணிமைக்கும் நேரத்தில் ஷூட்டிங்கை முடித்த இயக்குனர் – குஷியில் சுந்தர் சி!
இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கும் மாயா பஜார் 2016 ரீமேக்கின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கும் மாயா பஜார் 2016 ரீமேக்கின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் மாயா பஜார் 2016 என்ற கன்னட படத்தின் ரீமேக்கை அவரின் உதவியாளர் பத்ரி இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் கன்னட இயக்குனர் ராதாகிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் ராஜ் பி.ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சுதா ராணி, அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கிரைம் காமெடி திரில்லர் படமாகும். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற சுந்தர் சி கடந்த மாதம் படப்பிடிப்பை தொடங்கினார். விறுவிறுவென படப்பிடிப்பை நடத்திய இயக்குனர் பத்ரி இப்போது மொத்த படப்பிடிப்பையும் முடிக்கும் தருவாயில் உள்ளாராம்.
இந்த படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் தீபாவளி அன்று வெளியாக இருந்ததால் குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பை இயக்குனர் முடித்துள்ளதால் சுந்தர் சி மகிழ்ச்சியாகியுள்ளார். அதனால் திட்டமிட்டப்படி படம் தீபாவளி அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.