Connect with us

Cinema News

உனக்கு சான்ஸ் கொடுக்க வாய்பில்ல ராஜா.! – கெளதம் மேனனுக்கு நோ சொன்ன மணிரத்னம்…

இயக்குனர் கெளதம் மேனன் சினிமா துறையில் பெரும் இயக்குனர் என்றாலும் அவரது திரைப்படங்களில் அதிகம் இயக்குனர் மணிரத்னத்தின் சாயலை பார்க்க முடியும். ஆனால் கெளதம் மேனன், மணிரத்னத்திடம் பணிப்புரிந்தது கூட கிடையாது.

கெளதம் மேனன் படங்களில் வரும் வசனங்கள், காட்சி அமைப்புகள் போன்றவை அதிகப்பட்சம் மணிரத்னம் திரைப்படங்களோடு ஒத்திருப்பதை பார்க்க முடியும். இயக்குனர் மணிரத்னம் அலை பாயுதே, உயிரே போன்ற காதல் படங்களையும் எடுத்துள்ளார். அதே போல தளபதி, நாயகன் போன்ற ஆக்‌ஷன் படங்களையும் எடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட கெளதம் மேனனும் அதே முறையை பின்பற்றியுள்ளார். உண்மையில் கெளதம் மேனனுக்கு மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்பதே பெரும் ஆசையாக இருந்தது. ஆனால் அவருக்கு சினிமாவிற்கு வந்த சமயத்தில் மணிரத்னத்திடம் வாய்ப்பே கிடைக்கவில்லை.

நோ… சொன்ன மணிரத்னம்:

தற்சமயம் நேர்க்காணல் ஒன்றில் அவர் மணிரத்னத்திடம் பேட்டி எடுப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அப்போது மணிரத்னத்திடம் பேசிய கெளதம் மேனன் “சார் ஒரு காலத்துல உங்கக்கிட்ட வாய்ப்பு கேட்டு சுத்தி இருக்கேன். அப்ப எல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கல. இப்ப பெரிய இயக்குனர் ஆயிட்டேன். இப்ப என்ன உங்க படத்துல உதவி இயக்குனரா சேர்த்துப்பிங்களா?” என கேட்டுள்ளார்.

நோ.. இப்பயும் உங்களை உதவி இயக்குனரா சேர்த்துக்க முடியாது. இப்போ நீங்க பெரிய இயக்குனர். உங்கள் படத்துக்காக ஒரு கூட்டம் காத்திக்கிட்டு இருக்கு. அவங்களுக்காக இப்ப நீங்க படம் எடுக்குறதுதான் சரியா இருக்கும். என பதிலளித்துள்ளார் மணிரத்னம்.

Continue Reading

More in Cinema News

To Top