17 வருடங்களுக்குப் பிறகு ரேணிகுண்டா 2 : வெளியானது மிரட்டலான டைட்டில் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி, ஆக்சன் மற்றும் எதார்த்தமான வாழ்வியலை மையமாக வைத்து வெளியான திரைப்படம் ரேணிகுண்டா.
 
renigunta movie

தமிழ் சினிமாவில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி, ஆக்சன் மற்றும் எதார்த்தமான வாழ்வியலை மையமாக வைத்து வெளியான திரைப்படம் ரேணிகுண்டா. இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில், ஐந்து இளம் சிறுவர்களின் குற்றப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்தது. 

இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் கருப்பன் என்ற படத்தை இயக்கினார் பன்னீர் செல்வம். இந்த படமும் ஓரளவிற்ர்கு வெற்றி பெற்றது. இதையடுத்து இவரது இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.  

இந்நிலையில்  ரசிகர்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு  ரேணிகுண்டா படத்தின் இரண்டாம் பாகமான  ரேணிகுண்டா 2  படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் இன்று (ஜூன் 5) வெளியானது.

ஏ பன்னீர்செல்வம் ஃபிலிம் ஃபேக்டர நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் பன்னீர்செல்வமே இயக்கி தயாரிக்கும் 'ரேணிகுண்டா 2' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. "தி கேங் இஸ் பேக் வித் எ பேங்  என்ற  வாசகத்துடன் இந்த டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்  நாளை வெளியாகவுள்ளதாகவும் படக்குழுவினர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

Tags

From Around the web