Connect with us
vijayakanth

latest news

விஜயகாந்த் அழுதுட்டார்!.. கேப்டன் பிரபாகரன் அனுபவம் பேசும் ஆர்.கே.செல்வமணி…

Captain Prabhakaran: நடிகர் விஜயகாந்தின் நூறாவது திரைப்படமாக வெளிவந்தது கேப்டன் பிரபாகரன். 1991ம் வருடம் வெளியான இப்படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தரும் விஜயகாந்தும் இணைந்து இப்படத்தை உருவாக்கியிருந்தனர்.

விஜயகாந்தை வைத்து ஆர்.கே செல்வமணி இயக்கிய புலன் விசாரணை படத்தின் மேக்கிங் விஜயகாந்த், ராவுத்தர் இரண்டு பேருக்குமே மிகவும் பிடித்திருந்தது. அதோடு படமும் வெற்றி பெற்றதால் ‘என்னுடைய நூறாவது படத்தை நீயே இயக்கு’ என்கிற வாய்ப்பை செல்வமணிக்கு கொடுத்தார் விஜயகாந்த்.

அப்படி வெளியான கேப்டன் பிரபாகரன் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வசூலில் சக்கை போடு போட்டது. அதோடு கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி இப்படம் தமிழகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெளியான 12 நாட்களில் இதுவரை 25 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதையடுத்து பல ஊடகங்களிலும் இந்த படம் பற்றிய அனுபவங்களை இப்படத்தின் இயக்குனர் ஆர்.கே செல்வமணி பகிர்ந்து வருகிறார்.

rk selvamani
rk selvamani

ஊடகம் ஒன்றில் பேசிய ஆர்.கே செல்வமணி ‘ராவுத்தரும் விஜயகாந்தும் என்னிடம் முழு கதையையும் கேட்கவில்லை. முழுதாக என்னை நம்பினார்கள். அதோடு நான் என்ன நினைக்கிறேனோ அதை எடுக்கும் சுதந்திரத்தையும் கொடுத்தார்கள். நான் என்ன எடுக்கிறேன்? எதற்காக எடுக்கிறேன்? என்று கேட்காமல் விஜயகாந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். ராவுத்தருக்கு என் மீது நம்பிக்கை இருந்தது. ராவுத்தர் சொன்னால் விஜயகாந்த் அப்படியே கேட்பார். எனவே அதி எனக்கு வசதியாக இருந்தது.

சென்சாருக்கு அனுப்புவதற்காக படத்தின் முதல் பாதியை விஜயகாந்திடம் போட்டுக் காட்டினேன். படத்தை பொறுமையாக பார்த்த அவர் படம் முடிந்ததும் அழுது கொண்டே என்னை கட்டி அணைத்துக்கொண்டார். என்னை பார்த்து ‘தம்பி நீ என்ன பெரிய தயாரிப்பாளர் ஆக்கிட்ட’ என சொன்னார்’ என கூறியிருக்கிறார் ஆர்.கே செல்வமணி.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top