ஆறு மாசம் மாரியாகவே வாழ்ந்தார் பார்வதி - நூறுசாமி இயக்குனர் பொறாமை!
தமிழ் திரைப்படத்துறையில் மிக குறுகிய திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் அது ஒவ்வொன்றும் அச்சு அடுத்தார் போல் வரலாறு பேசும் திரைப்படமாக பார்க்கப்பட்டு புகழ் பாராட்டக் கூடியவர் இயக்குனர் சசி. இவரது இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா கூட்டம், அதன் பிறகு டிஷ்யூம் ,2008 ஆம் ஆண்டு வந்த பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறது .
இந்த நிலையில் நுறு சாமி திரைப்படத்தை இயக்குனர் சசி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இப்படியான சமயத்தில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சசி வருடம் நேர்காணல் எடுப்பவர் நீங்கள் கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் விதமும் நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் எதுவும் மிகவும் அற்புதமாக இருக்கிறது.

அது திரைப்படம் வெற்றிக்கு வழி வகுக்கிறது. அது எப்படி என கேள்வி எழுப்பதற்கு....நடிகர், நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்போடு இருக்கிறார்கள். அதுதான் எனக்கு வெற்றியை தேடி கொடுக்கிறது. அப்படித்தான் பூ படத்தின் நடிகை பார்வதி தான் ஒரு நடிகை என்பதை அவ்வளவு பெருமைப்படுவார். நான் ஒரு கதாபாத்திரத்தில் ஆறு மாதம் பூ படத்தில் மாரி கதாபாத்திரத்தில் பார்வதி நடித்திருந்தார்
.
அந்த கதாபாத்திரமாகவே கிட்டத்தட்ட அவர் ஆறு மாதங்கள் வாழ்ந்தார். நாங்க எல்லாம் படத்தின் கதையை எழுதுவோம் அதோடு அடுத்த கதை எழுத சென்று விடுவோம். ஆனால் கிட்டத்தட்ட அந்த படப்பிடிப்பு ஆரம்பித்த முடியும் வரை அந்த கதாபாத்திரமாகவே பார்வதி வாழ்வார். அதன் பிறகு தான் இன்னொரு படத்தையே அவர் ஒப்பந்தம் செய்வார். இதற்கிடையில் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆக மாட்டார். தான் ஒரு நடிகை என்பதில் அவ்வளவு பெருமை கொள்வார். படத்தின் இயக்குனரான நாங்களே அவ்வளவு பெருமைப்படமாட்டோம் என்றார்.
