Connect with us
director shankar

Cinema News

வேள்பாரிய உங்களால எடுக்க முடியுமா?!. சான்ஸே இல்ல!.. எகிறும் பிரபலம்!…

இயக்குனர் ஷங்கர் வேள்பாரி என்ற நாவலை பிரம்மாண்டமான படமாக எடுக்கப் போகிறார். அதன் முக்கியமான காட்சிகளும் வேறொரு படத்தில் வந்துள்ளதாகவும் எங்கள் உழைப்பைத் திருடாதீர்கள் என்றும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

Also read: பிரச்சார வண்டி மட்டுமில்ல.. கேப்டன்கிட்ட கொடுக்கப்பட்ட எம்ஜிஆரின் மற்றொரு பொக்கிஷம்

மேலும் அதை திருடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்து இருந்தார். அந்தளவுக்கு வேள்பாரி படத்தை ரகசியமாக பொத்திப் பொத்தி எடுத்தவருக்கு இப்படி ஒரு சோதனையா என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் பிரபல எழுத்தாளர் கிருஷ்ணவேல் இந்தப் படத்தை எடுக்க முடியாது என்ற கோணத்திலும் அதற்கான விளக்கத்தையும் தெரிவித்துள்ளார்.

வேள்பாரி நாவல் கிடையாது. தொடர். ஒவ்வொரு வாரமும் அப்படியே போய்க்கிட்டே இருக்கும். ட்விஸ்ட் வச்சி முடிப்பாங்க. அதை முடிக்கவே முடியாது. டிவி சீரியலை யாராவது சினிமாவா மாத்த முடியுமா? ஒரு அறிமுகம், ஒரு விளக்கம், ஒரு கிளைமாக்ஸ் இருந்தால் தான் அது படமா போகும். பொன்னியின் செல்வன் நாவலாக இருந்ததால் தான் எடுக்க முடிந்தது. இந்தக் கதையை குறைச்சி சொல்லல.

velpari

velpari

பாரியைப் பற்றி ரெண்டே விஷயம் தான் ஒரு இடத்துல அற்றைத் திங்கள் அந்நிலவில்னு ஒரு வரி வருது. அங்கவை, சங்கவைன்னு 2 பெண்கள் பாடுறாங்க. அதைப் போல முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரின்னு வரும். எம்ஜிஆர் அந்தப் பாடலைத் தான் அன்றும் வந்தது அதே நிலான்னு பாடினார். எழுத்தாளர் உட்கார்ந்து நாவல் மாதிரி முழுவதும் எழுதி புத்தகமாகக் கொடுக்கும்போது தான் அதை சினிமாவா எடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also read: கடும் சிக்கலில் மாட்டிய ரஜினி… தூக்கி விட்ட கண்ணதாசன்… அட அந்தப் படமா?

இந்தியன் 2 படம் இயக்குனர் ஷங்கருக்கு பெரிய தோல்வியைக் கொடுத்துவிட்டது. தொடர்ச்சியாக ராம்சரணை வைத்து கேம்சேஞ்சரை பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார். இதை அடுத்து வேள்பாரி நாவலை 3 பாகங்களாக எடுக்க உள்ளதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top