Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வேஷம் போட்டு நீலி கண்ணீர் வடிக்காதே… சுஷாந்த் காதலி வெளியிட்ட Emotional வீடியோ!

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக  நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் 14ம் தேதி ஞாயிற்று கிழமை தற்கொலை செய்து கொண்டார். நாடகம், சின்னத்திரை , மேடை நடனம் என அடித்தளத்தில் இருந்து முயற்சித்து சினிமாவில் நுழைந்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பாலிவுட்டின் நட்சத்திர குடும்பங்கள் ஒன்று கூடி அவரை ஒதுக்கியுள்ளனர்.

540e951a6b1c1e5b96c4ac862836ff7c

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சதி செய்து அவரை நடிக்கவிடாமல் வாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 படவாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் சுஷாந்தின் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நடிகை ரியா சக்ரவர்த்தி ரூபாய் ரூ15 கோடி சுஷாந்தை ஏமாற்றி வேறு ஒரு அக்கவுன்ட்டுக்கு மாற்றியுள்ளார். மேலும்,  ரியா ஒரு சில நபர்களுடன்  சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்து துன்புறுத்தியுள்ளார்.

சுஷாந்திற்கு மன அழுத்தமே இல்லை. மன அழுத்தத்தை ரியா உருவாக்கியுள்ளார்.  இந்த விவகாரத்தில் ரியாவேதான் மருத்துவர்களை ஏற்பாடு செய்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வைத்திருக்கிறார். எனவே அந்த மருத்துவர்களை விசாரிக்கவேண்டும். கடைசியாக ரியா சுஷாந்த்தை விட்டு செல்லும்போது சுஷாந்தின் க்ரெடிட் கார்டு, லேப்டாப், மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளார். என அடுக்கடுக்கான பல திடுக்கிடும் குற்றங்களை முன்வைத்து சுஷாந்தின் தந்தை புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ரியா மீது வழக்கு பதிவு செய்தா பாட்னா போலீசார் ரியாவை கைது செய்ய மும்பையில் உள்ள அவரது  வீட்டிற்கு விரைந்துள்ளனர். ஆனால், அவரை அங்கு காணாததால் ரியா தலைமறைவாகியிருக்கக்கூடும் என போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில் தற்ப்போது நடிகை ரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனக்கு கடவுள் மேலும் , சட்டத்தின் மேலும் நம்பிக்கை உள்ளது. எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னை பற்றி மோசமான விமர்சனங்கள் சமூகவலைத்தளத்தில் பேசுகிறார்கள். ஆனால், அதை பற்றி இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாம் என என்னுடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

விரைவில் இதற்கான உண்மை வெளிவரும். நான் குற்றவாளி இல்லை என்பது நிரூபணமாகும் சத்யமேவ ஜெயதே என கூறி இந்த வீடியோவை முடித்துள்ளார். இதற்கு சுஷாந்த் ரசிகர்கள் வேஷம் போட்டு நீலி கண்ணீர் வடிக்காதே உன்னுடைய உண்மை ரூபம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என விமர்சித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top