">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இந்தியாவுக்கே முன்னோடியான முதல்வர்… மற்ற மாநிலங்களும் அதிரடி அறிவிப்பு…
இந்தியாவுக்கே முன்னோடியான முதல்வர்… மற்ற மாநிலங்களும் அதிரடி அறிவிப்பு…
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகெங்கும் அச்சுறுத்தி வருகிறது. தமிழகமும் கடந்த 6 மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது.
இதில் தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளியே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், வெளியே சென்று வீடு திரும்பினால் கட்டாயம் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தியதன் விளையாவக கடந்த பல மாதங்களாக 6 ஆயிரத்திற்கு மேல் இருந்த தினசரி கொரோனா பதிப்பு தற்போது 3 ஆயிரமாக குறைந்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சிறந்த ஆளுமையால் சிறப்பான ஆட்சியை நடத்தி தமிழகத்தில் கொரோனா பாதிப்பை குறைத்துள்ளார். தமிழகத்தை சிறப்பாக வழிநடத்தி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழ வைத்துள்ளார்.
மேலும், கொரோனா நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடப்பட்டவுடன் தமிழகத்தில் அனைவருக்கும் அம்மருந்து இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அண்டை மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழகத்தை தொடர்ந்து மத்திய பிரதேசம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளன. எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்டை மாநிலங்களின் முன்னோடியாக திகழ்ந்து நாட்டை வழி நடத்தி செல்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்கிற அறிவிப்பு தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.