ஜன நாயகன் எங்கே இருந்து லீக் ஆனது தெரியுமா?.. எடிட்டர் கொடுத்த விளக்கம்.. மொத்தமும் போச்சு!..
விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே வெளியாகி இருந்தால் படக்குழுவுக்கு இத்தனை பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்காது. அரசியல் சதி காரணமாக சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தான் படம் லீக் ஆக காரணம் என்கின்றனர்.
எடிட் ரெஃப்ரன்ஸ் உடன் ஜனநாயகன் படம் லீக்கான நிலையில், சென்சார் போர்டில் இருந்து லீக் ஆகவில்லை என தணிக்கை குழு அறிவித்து விட்டனர். இந்நிலையில், எடிட்டர் பிரதீப் ராகவ் மீதே தயாரிப்பு நிறுவனத்துக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், எடிட்டர் சங்கம் இன்று விளக்க அறிக்கை கொடுத்துள்ளது.
அதில், ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தாமதமான நிலையில், சில சிஜி காட்சிகளை நல்லா எடிட் செய்வதற்காக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அங்கே ஒரு பெரிய டீமே சிஜி வேலைகளை பார்த்ததாக கூறுகின்றனர்.
அங்கே இருந்து தான் படம் மொத்தமும் கசிந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என தற்போது எடிட்டர் சங்கம் பிரதீப் ராகவ் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் வளர்ச்சி பிடிக்காமல் டோலிவுட்டில் இருந்த யாரோ சிலர் தான் ஜன நாயகன் மொத்த படத்தையும் திருடி தற்போது லீக் செய்துள்ளனர் என்கின்றனர். கூடிய விரைவிலேயே உண்மையான குற்றவாளிகள் பிடிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சைபர் கிரைம் போலீஸார் சுமார் 6 பேரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் யார், அவர்களின் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
