Connect with us
Surya

Cinema News

திடீரென பெண்களுக்கு குரல் கொடுக்கும் சூர்யா குடும்பம்… என்ன சம்பவம் தெரியுமா?

Kollywood: கோலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் தற்போது போட்டிருக்கும் பதிவு ஒன்று இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது.

கோலிவுட் பிரபலங்களான சூர்யா, ஜோதிகா, கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது வெளியிட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது. இவர்கள் வெளியிட்டிருக்கும் பதிவில், பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளை எதிர்க்க சபதமேற்கிறேன். என் சமூகத்தில் உள்ள பெண்களுக்கு செவிகொடுத்து, உரிய மரியாதையும் ஆதரவும் அளிப்பேன்‌ என்று உறுதியளிக்கிறேன். 

இதையும் படிங்க: குட் பேட் அக்லி டீமுக்கு நோ சொன்ன அனிருத்… உள்ளே வரும் முக்கிய பிரபலம்…

வாருங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் மதிப்பு மிக்கவராகவும் உணரும் ஒர் உலகை உருவாக்குவோம் என பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து ஆராய்ந்து பார்க்கும் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் பெண் இயக்கத்துடன் பிரபலங்கள் ஒன்றிணைந்து இதை பதிவிட்டு இருக்கின்றனர்.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜயும் பதிவிட்டு இருக்கும் பதிவில், சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம் முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்வி உரியதாகவே இருக்கிறது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், நாள்தோறும் நிகழும் செய்திகள் துயரம் அளிக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முதல் படமாக ஓடிடியில் எண்ட்ரியாகும் லக்கி பாஸ்கர்.. தேதி இதுதானுங்கோ!

இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு உடனடியாக தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துவதாக தெரிவித்து இருக்கிறார். தொடர்ச்சியாக மற்ற பிரபலங்களும் பதிவிட்டு வருவதும் வைரலாகி வருகிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top