அதிமுகவை அரியணையில் ஏற்ற உறுதி ஏற்போம் - இபிஎஸ் ஓபிஎஸ் அஞ்சலி

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதேபோல், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 33வது நினைவு தினமும் இன்று அதிமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆரின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவும், அவர்களது முன்னேற்றத்திற்காகவும் சரித்திரத் திட்டங்கள் பல வகுத்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் Dr.எம்.ஜி.ஆர் அவர்களது 33-வது நினைவுதினத்தை முன்னிட்டு, இன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினேன் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அதேபோல், பெரியாருக்கும் டிவிட்டரில் அஞ்சலி செலுத்தினார்.
கழக நிறுவனத்தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்தவருமான நமது மக்கள்திலகம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவுநாளில், அவரது நினைவுகளை இதயத்தில் வைத்து கழகப்பணி ஆற்றுவோம்! புரட்சித்தலைவரின் புகழை எந்நாளும் காப்போம்!! #MGR33 pic.twitter.com/Rxj6bq7siL
— O Panneerselvam (@OfficeOfOPS) December 24, 2020
அதேபோல், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டிவிட்டரில் ‘புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பொற்கால ஆட்சி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சி, விசுவாசத் தொண்டர்களின் நேர்மையான ஆட்சி, "மக்கள் தான் எஜமானர்கள் என நினைக்கும் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர" ஒற்றுமையுடன் நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வோடு உளமார பாடுபடுவோம்!’ என பதிவிட்டுள்ளார்
அஇஅதிமுக ஏழைகளைக் காக்கின்ற இரும்புக்கோட்டை; இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை நமக்குத் தந்த புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழை எந்நாளும் காப்போம்! #MGR33 #எம்ஜிஆர் #AIADMK pic.twitter.com/gEZyId3OW5
— O Panneerselvam (@OfficeOfOPS) December 24, 2020