Categories: Cinema News latest news

வருத்தப்பட்டாரா சிம்பு..! அப்படி என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்..?

பிக்பாஸ் சீசன் 5 முடிவடைந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விஜய் ஹாட்ஸ்டாரில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது. தவிர்க்க முடியாத சூழ்நிலையால் கமல் இந்நிகழ்ச்சியை தொடரமுடியவில்லை.

நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்பொழுது சிம்பு அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். காரசாரமான பேச்சாலும் புத்திசாலித்தனமான கேள்வியாலும் போட்டியாளர்களை திணற வைக்கிறார்.

எப்பயும் போல 17 போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் அனிதா சம்பத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன் வைத்து வருகிறார். எதையும் யோசிக்காமல் தன் முன் கோபத்தால் பட்டென்று பேசக்கூடியவர் அனிதா சம்பத்.

இந்த நிலையில் இன்னொரு போட்டியாளரான சுருதியிடம் அனிதா சம்பத் சிம்புவிற்கு என்ன தெரியும், கமல் சாராவது 5 சீசனையும் பார்த்து பேசுபவர். இவர் இந்த நிகழ்ச்சியை மட்டும் பார்த்து என்ன எப்படி பேசுவார் என எதிர்மறையான கருத்துக்களை பதிவு பண்ணிக் கொண்டு வருகிறார். இது சிம்புவின் காதுக்கு எப்பொழுது போகுமென்று தெரியவில்லை.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini