Categories: latest news throwback stories

காமெடி கதை சொல்வாருன்னு பார்த்தா!. அந்த சூப்பர்ஹிட் படம்!

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம்தான் இம்சை அரசன் 23ம் புலிகேசி. சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு படத்தை இயக்கலாம் என ஷங்கர் முடிவு செய்தார். அதற்காக சிம்புதேவன் அவரிடம் சொன்ன கதை 23ம் புலிகேசி கதை அல்ல. அவர் ஒரு சீரியஸான கதையைத் தான் ஷங்கரிடம் முதல்ல சொன்னார்.

சிம்புவுடைய நகைச்சுவை உணர்வு நல்லா தெரியும். அவரோட கார்டூனையும் பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். அதனால அவர்கிட்ட பேசும்போது நீங்க ஒரு காமெடி கதையைத் தான் எங்கிட்ட சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்னு ஷங்கர் சொன்னாராம்.

சிம்புதேவன்: அதற்கு சிம்புதேவன் முதல் படமே காமெடி படமாக யாரும் எடுக்க மாட்டாங்கன்னு தான் நான் நினைச்சேன் சார். அதான் சொல்லல. ஆனா நல்ல ஒரு காமெடி கதை எங்கிட்ட இருக்குன்னு சொன்னாராம்.

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம்தான் இம்சை அரசன் 23ம் புலிகேசி. சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கலாம் என ஷங்கர் முடிவு செய்தார். அதற்காக சிம்புதேவன் அவரிடம் சொன்ன கதை 23ம் புலிகேசி கதை அல்ல. அவர் ஒரு சீரியஸான கதையைத் தான் ஷங்கரிடம் முதல்ல சொன்னார்.

காமெடி கதையை எதிர்பார்த்தேன்: சிம்புவுடைய நகைச்சுவை உணர்வு நல்லா தெரியும். அவரோட கார்டூனையும் பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். அதனால அவர்கிட்ட பேசும்போது நீங்க ஒரு காமெடி கதையைத் தான் எங்கிட்ட சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்னு ஷங்கர் சொன்னாராம். அதற்கு சிம்புதேவன் முதல் படமே காமெடி படமாக யாரும் எடுக்க மாட்டாங்கன்னு தான் நான் நினைச்சேன் சார். அதான் சொல்லல. ஆனா நல்ல ஒரு காமெடி கதை எங்கிட்ட இருக்குன்னு சொன்னாராம்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி: அதைத் தொடர்ந்து அவர் சொன்ன கதைதான் இம்சை அரசன் 23ம் புலிகேசி. அந்தக் கதையைப் படிக்கும்போது நான் பல இடங்களில் மனம் விட்டு சிரித்தேன். தியேட்டரிலும் அந்த ரிசல்ட் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். அது ஒரு சதவீதம் கூட மிஸ் ஆகாம அப்படியே நடந்தது என்றாராம் ஷங்கர். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v