Connect with us

latest news

கடுப்பில் இருக்கும் மீனா… தங்கமயில் புராணமா இருக்கே… களைக்கட்டும் பிறந்தநாள்..

VijayTv: ராமமூர்த்தி பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என ஈஸ்வரியிடம் குடும்பத்தினர் கூறிக் கொண்டிருக்கின்றனர். அவரும் அதற்கு சம்மதம் கூற ஆனால் ராமமூர்த்தி முதலில் மறுத்துவிடுகிறார். பின்னர் எல்லோரும் வற்புறுத்த அவர் சரி செய்து கொள்ளுங்கள் என கூறி விடுகிறார்.

பிறந்தநாள் ஃபங்க்ஷனுக்கு எழிலை கூப்பிடு என பாக்யாவிடம் ஈஸ்வரி கூற அவனுக்கு தெரியும் வரணும் நினைச்சா அவனே வருவான் என கூறிவிட்டு சொல்கிறார். வீட்டிற்கு வரும் கோபி ராதிகாவிடம் ஜெனி  கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறி சந்தோஷப்படுகிறார். ஆனால் ராதிகா உங்களுக்கு உங்க வீட்ல இருக்கவங்க சந்தோஷமா இருந்தா சிரிப்பீங்க கஷ்டமா இருந்தா அழுவீங்க என்ன பாத்தா எப்படி தெரியுது என்ன திட்டிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: இவருக்கு சனி ஜாதகத்துல இல்ல! கூடவே இருக்கு.. இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே

சிறகடிக்க ஆசை தொடரில் முத்து குடித்து விட்டு வந்ததை பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார். உங்களுக்கு இப்ப சந்தோஷமா என மீனா கேட்க இவன் உன்னால தான் குடிச்சான். நான் போய் அல்வா சாப்பிட போறேன் என கூறிவிட்டு செல்கிறார். காலையில் எழும் முத்துவை பார்த்து அண்ணாமலை குடித்துவிட்டு வந்தியா என கேட்கிறார்.

Bakkiyalakshmi

உடனே விஜயா ஆமாம் என பதில் சொல்கிறார். மீனாவை அழைக்கும் அண்ணாமலை இனிமே இவன் குடிச்சிட்டு வந்தா வீட்டுக்குள்ள சேர்க்காத என கூறி விடுகிறார். செட்டில் நண்பர்களுடன் இருக்கும் முத்து மீனா மீது கோபத்தில் இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவர்கள் வீட்டில் இருந்து மீனா அம்மா மற்றும் சீதா இருவரும் வர அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: கமலுக்கு மட்டும்தானா?!.. ரஜினிக்கு இல்லையா?!. எதிர்ப்பை மீறி வைக்கப்பட்ட தலைப்பு!…

செந்தில் இந்த விஷயத்தை வீட்டில் வந்து கூற கோமதி தங்க மயிலுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி பேசிக் கொண்டிருக்கிறார். சரவணன் தங்க மயிலுக்கு புடவை மற்றும் ஸ்வீட் என வாங்கி கொடுத்து அவரை சந்தோஷப்படுத்துகிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top