Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கொரோனாவிலிருந்து எஸ்.பி.பி மீண்டு விட்டாரா? – சரண் விளக்கம்

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  இந்தியாவின் முன்னணி சினிமா பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ff98106993fba2678dee629df36cbdc0

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்காக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வந்தனர். எக்மோ கருவிகள் மூலம் செயற்கைளை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறி கொரோனா தொற்றிலிருந்து விடுபட திரைபிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மகன் சரண் கொரோனா பரிசோதனையில் அப்பாவிற்கு நெகட்டிவ் என வந்துள்ளதாக தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. 

ஆனால், இந்த தகவலை சரண் மறுத்துள்ளார். எஸ்.பி.பியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும் அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் முழுவதும் குணமடைந்துவிட்டதாக யாரோ வதந்தி பரப்பியுள்ளனர். என் தந்தையுன் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் பேசிவிட்டு இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன் என அவர் கூறியுள்ளார். மேலும், என் தந்தையின் உடல் நிலை பற்றி யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top