Categories: Cinema News latest news

பேட்ட படத்தை விஸ்வாசம் காலி செஞ்சது இப்படித்தான்!… 2 வருடம் கழித்து வெளியான தகவல்..

2019 பொங்கலுக்கு 2 பெரிய படங்கள் வெளியானது. கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம். 2 படங்களுமே ரசிகர்களை கவர்ந்தது.

கார்த்திக் சுப்பாராஜ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் பல படங்களில் ரஜினியிடம் அவர் என்னென்ன ரசித்தாரோ அவை அனைத்தையும் பேட்ட படத்தில் செய்ய வைத்தார். எனவே பல வருடங்களுக்கு பின் பழைய ரஜினியை பார்த்தது போல் இருந்தது என பலரும் கூறினர். எனவே, தியேட்டர்களில் கூட்டம் அள்ளியது.

ஆனால், விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற தந்தை – மகள் செண்டிமெண்ட் ரசிகர்களை கட்டிப்போட ‘பேட்ட’ படத்தை விட அப்படம் அதிக வசூல் செய்தது. இதனால் பேட்ட படத்திற்கு வசூல் குறைந்தது. இதை மனதில் வைத்த அதே சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி.

இந்நிலையில், பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் அதிகம் வசூல் செய்ததற்கான பின்னணியில் வேறு சில காரணங்களும் இருப்பது தெரியவந்துள்ளது. விஸ்வாசம் படம் பொங்கல் ரிலீஸ் என முதலிலேயே அறிவிக்கப்பட்டது. எனவே, அதிக தியேட்டர்களை விஸ்வாசம் கைப்பற்றி விட்டது. ஆனால், சில நாட்கள் கழித்தே பேட்ட படம் பொங்கல் ரிலீஸ் என அப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

எனவே, குறைவான தியேட்டர்களே பேட்ட படத்திற்கு கிடைத்தது. இந்த முறை அது நடக்கக் கூடாது என்பதில் சன் பிக்சர்ஸ் உறுதியாக இருந்தது. எனவே, அண்ணாத்த படம் துவங்கிய போதே தீபாவளி ரிலிஸ் என அறிவித்துவிட்டது. அதோடு, சிவாவின் கோரிக்கையை ஏற்று தனது வலிமை படத்தை அஜித்தும் பொங்கல் ரிலீஸ் என முடிவு செய்து அறிவிக்கப்பட்டும் விட்டது.

எனவே, அண்ணாத்த படம் அதிக தியேட்டர்களை பெற்று அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா