Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

செய்வினை வைத்துவிடுவேன்… ரத்தம் கக்கி சாவாய்… பெண்ணை மிரட்டிய மந்திரவாதி!

சேலம் அருகே தோஷம் கழிக்கவேண்டும் என சொல்லி ஒரு பெண்ணின் வீட்டில் 25 பவுன் நகைகளை திருடியுள்ளார் ஒரு போலி மந்திரவாதி.

f2ae83dbf9ce8ab16a6c53a111951a86

சேலம் அருகே தோஷம் கழிக்கவேண்டும் என சொல்லி ஒரு பெண்ணின் வீட்டில் 25 பவுன் நகைகளை திருடியுள்ளார் ஒரு போலி மந்திரவாதி.

சேலம் சூரிய மங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபு. இவர் மந்திர தந்திரங்கள் அறிந்தவர் என்றும் தோஷங்களைக் கழிப்பவர் என்றும் ஊருக்குள் ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளார். மொகராஜ் பேகம் என்ற பெண்ணின் வீட்டுக்கு சென்ற பிரபு, வீட்டில் தோஷம் இருப்பதாக சொல்லி அதைக் கழிக்க சில பொருட்களை வாங்கி வர சொல்லி, கடைக்கு அனுப்பியுள்ளார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாத போது அந்த வீட்டில் இருந்த  25 பவுன் நகையை திருடிச்சென்று விட்டார். நகைகளைக் காணாததால் அதிர்ச்சியடைந்த பேகம், மந்திரவாதி மேல் சந்தேகப்பட்டு அவரிடம் சென்று நகைகளைக் கொடுக்க சொல்லி கேட்டுள்ளார். அதற்கு தான் நகைகளை திருடவில்லை என்றும் மீறி தன்னைத் தொந்தரவு செய்வினை வைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் போலீஸாரிடம் புகார் கொடுக்க, அவர்கள் பிரபுவைக் கைது செய்துள்ளனர். போலிஸாரிடம் திருடியதை ஒப்புக்கொண்ட பிரபு நகையை விற்று பைக் மற்றும் நிலம் வாங்கியதாக சொல்லியுள்ளார். அவரிடம் இருந்து அவற்றை போலிஸார் பறிமுதல் செய்த போலிஸார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top