
Cinema News
சிவாஜி போட்ட சிவப்பு துப்பட்டாவுக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருக்கா? அடடா மனுஷன் பெரிய ஆளுய்யா!
Published on
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா படத்தின் 100 வது நாள் விளம்பரம் அன்றைய பிரபல நாளிதழில் போட்டு இருந்தார்கள். அடுத்த படமாக நீதி படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல் வந்தது. அப்போது ஓய்வு இல்லாமல் தொடர்ந்து நடித்து வந்தாராம் நடிகர் திலகம்.
அக்டோபர் 1ம் தேதி அவரது பிறந்தநாளன்று மைசூரில் நீதி படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். காங்கிரஸ் கட்சி கூட்டம், நடிகர் சங்க கூட்டம் என பல வேலைகளில் ஈடுபட்டதால் ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தார் சிவாஜி.
Sivaji
அப்போது அவருக்கு ரத்த வாந்தியே வந்து விட்டதாம். அதனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பயந்து போய் டாக்டரை அழைத்துள்ளனர். அவரும் பரிசோதித்த பின் பிபி சற்று அதிகமாக உள்ளது. ஓய்வெடுக்க வேண்டும் என்றாராம்.
ஆனால் மறுநாள் காலை செங்கற்பட்டு அருகே சூட்டிங். எனக்காக எல்லாரும் காத்துக் கொண்டு இருப்பார்கள். கால்ஷீட் வேஸ்டாகி விடும் என்று கிளம்பி விட்டாராம். அன்று தான் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் எங்களது பூமி பாடலுக்கான சூட்டிங் நடந்தது. அந்தப் பாடலில் ஒயிட் அண்ட் ஒயிட்டில் செம ஜோராக இருப்பார் சிவாஜி. தோளில் ஒரு சிகப்பு கலர் துப்பட்டாவைப் போட்டு இருந்தாராம்.
இதையும் படிங்க… கமலுக்கு கதையே பிடிக்கல! ஆனாலும் நடிச்சி ஹிட் கொடுத்தார்!.. இப்படி போட்டு உடைச்சிட்டாரே இயக்குனர்!
தன்னையும் மீறி ரத்த வாந்தி வந்தால் யாருக்கும் தெரியாதவாறு துடைத்து விடலாம் என்று தான் அந்த சிகப்பு துப்பட்டாவைத் தோளில் போட்டு இருந்தாராம் சிவாஜி. தன்னால் படப்பிடிப்புக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்றே இப்படி செய்தாராம் நடிகர் திலகம். அதனால் தான் அந்த உயர்ந்த உள்ளத்தைப் பற்றி இன்றும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...