">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கங்கனா செய்ததை அவருக்கு செய்வது சரியல்ல… ஆதர்வாக குரல்கொடுத்த நடிகை!
மும்பையில் உள்ள நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகங்கள் மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகங்கள் மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கங்கனா ரனாவத்தின் மும்பை பாந்த்ரா நகர் அலுவலகம் மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி நேற்று இடிக்கப்பட்டது. ஆனால் சமீபகாலமாக மகாராஷ்டிராவை அளும் சிவசேனா கட்சியை தாக்கி பேசி வருவதும், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளதாக சொன்னதுதான் காரணம் என சொல்லப்படுகிறது. கங்கனா தீவிர பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கங்கனாவின் அலுவலகம் இடிக்கப்பட்டது குறித்து சக நடிகை தியா மிர்சா குரல் கொடுத்துள்ளார். அதில் ‘கங்கனாவின் அலுவலகம் திடீரென்று ஏன் அவர் அலுவலகம் இடிக்கப்படுகிறது. விதிமீறல் இருந்தால் இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தார்கள். கடந்த சில மாதங்களாக அவர் தனிமனித தாக்குதல்களில் ஈடுபட்டார். ஆனால் அதே நேரம் அவர் மீது தனிமனித தாக்குதல் நடப்பதையும் நான் விரும்பவில்லை.’ எனக் கூறியுள்ளார்.