
Cinema News
ஹீரோ ஜெய்சங்கர் ரஜினி படத்தில் வில்லன் ஆனது ஏன்?!.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்!..
Published on
By
தென்னக “ஜேம்ஸ்பாண்ட்” என்ற செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். துப்பறியும், திரில்லர் கதைகளில் அதிகமாக நடித்த இவர், குடும்பப்பாங்கான கதைகளிலும் நடித்து இருக்கின்றார்.
துரு துரு இளைஞனாக காதல் காட்சிகளில் நவரசம் சொட்டும் நடிப்பு, ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷம், அதிரடி. இப்படி நடிப்பில் தனித்துவம் பதித்து வந்த ஜெய்சங்கர், ரஜினிகாந்த் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த “முரட்டுக்காளை” படம் ரசிகர்களை கவர்ந்தது அந்நாட்களில். அண்ணன் – தம்பிகள் பாசத்தை முன்வைத்து வந்த இந்த படத்தில் ரதி கதாநாயகியாக நடித்திருந்தார். நகைச்சுவைக்கு ஒய்.ஜி.மகேந்திரன், பாடல்கள் எல்லாம் கேட்கும் படியாக என ஒவ்வொரு அம்சத்திலும் சிறந்து விளங்கியது இப்படம்.
“பொதுவாக என் மனசு தங்கம்” என மலேசியா வாசுதேவன் குரலில் வந்த பாடல் இன்றும் திருவிழா நேரங்களில் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ரஜினியுடைய தோற்றமும் முழுக்க, முழுக்க கிராமத்திலேயே படமாக்காப்பட்ட காட்சிகள் என ரஜினியின் சினிமா சரித்திரத்தில் முத்திரை பதித்த படங்களில் இதுவும் ஒன்று.
rajini jeysankar
இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பார் ஜெய்சங்கர். கதாநாயகனாக வலம் வந்தவரை எப்படி திடீரென வில்லனாக்குவது என யோசிக்க, அவரிடம் மேலும் இதனை அவரிடம் எப்படி கேட்பது என தயக்கமும் இருந்ததாம். தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் ஜெய்சங்கரிடம் கதை குறித்தும், கதாபத்திரத்தின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்கூறி அவரின் சம்மதத்தை பெற்றனர். நீங்கள் பெரிய நிறுவனம். எனக்கு கெடுதல் செய்ய மாட்டீர்கள். நான் நடிக்கிறேன் என சம்மதம் சொன்னார் ஜெய்சங்கர். ஜெய்சங்கர் நடிக்க ஒப்புகொண்டதை கேட்டு ரஜினியே ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.
ரஜினி படம் என்பதனாலேயே படத்தின் எதிர்பார்ப்பு எகிறத்துவங்கியது துவக்கத்திலேயே. ஜெய்சங்கர் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பினை சரியாக பயன்படுத்தவும் தவறவில்லை. இந்த படத்தில் மெருகேறிய விதமாக இருந்தது அவரது வில்லத்தனம்
ரஜினியும், இவரும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் திரையரங்குகளில் “விசில்” சத்தம் காதுகளை கிழித்தனவாம். அதன்பின் பல வருடங்கள் வில்லனாக நடித்தார் ஜெய்சங்கர். ரஜினியின் “படிக்காதவன்”, ‘தளபதி”, “அருணாச்சலம்” படங்களில் முக்கிய வேடத்தினை ஏற்று நடித்திருந்தார் ஜெய்சங்கர்.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...