">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பொன்னியின் செல்வன் அப்டேட் – வைரல் புகைப்படத்தை வெளியிட்ட ஜெயம்ரவி
பொன்னியின் செல்வன் அப்டேட் – வைரல் புகைப்படத்தை வெளியிட்ட ஜெயம்ரவி
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ரகுமான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருகிறது. எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் பிரம்மாண்ட செலவில் உருவாகி வருகிறது. பாகுபலி போல் 2 பாகங்களாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுவென நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து கார்த்தி, பிரகாஷ்ராஜ், த்ரிஷா உள்ளிட்ட பலரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஜெயம்ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். ஏற்கனவே நடிகர் ரகுமான் சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.