மனவேதனையில் ஆர்த்தி... மன்னிப்பு கேட்ட ரவி மோகன்!
ரவி மோகன்:
நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிந்த பிறகு பிரபல பாடகி கெனிஷாவுடன் லிவிங் லைப் வாழ்ந்து வந்தார். ஆனால், தற்போது அவரும் ஜெயம் ரவியை விட்டு பிரிந்து விட்டார். காரணம் ஆர்த்தியின் தொடர் அழுத்தமே என கூறப்பட்டது.
சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ஜெயம் ரவி மனைவி கொடுத்த டார்ச்சர் மற்றும் மாமியார் உடனான பிரச்சனை, விவாகரத்து பிரச்சனை இது அனைத்தையும் குறித்து கொந்தளித்து பேசி இருந்தார். இந்த விஷயம் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகையும் அதிர வைத்தது . மேலும் ரசிகர்கள் பலரும் ஜெயம் ரவிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்கள்.
மன்னிப்பு:

இந்த நிலையில் தற்போது நடிகர் ரவி மோகன் திருமண தகவல் தொடர்பாக அவர் பேசியது குறித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அது குறித்த அவர் கூறியதாவது, என்னுடைய கருத்துக்களால் மனவேதனை அடைந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கூறியுள்ளார்.
இது இந்த விஷயத்தில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. காரணம் நடிகர் ரவிமோகன் மீண்டும் தனது மாஜி மனைவி ஆர்த்தி உடன் சேர்ந்து வாழ்க்கை நடத்துவாரா? என்ற ஒரு கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி மட்டும் நடந்துவிட்டால் அது ரசிகர்களுக்கு இன்பச் செய்தியாக அமையும் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!
