Categories: Cinema News latest news

உங்கள தொட்டால் நான் வருவேன்… கம்பீரமாய் துணை நின்ற விஜயகாந்த்.. நெகிழ்ந்து போன சினிமா பிரபலம்.!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பொது வாழ்விலும் தைரியமான மனிதராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். இப்படி பேசினால் நமக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்பதெல்லம் பார்ப்பதில்லை. தப்பு என அவருக்கு தெரிந்தால் அது யாராக இருந்தாலும் எதிர்த்து கேட்டு விடுவார்.

இவரது தைரியத்தை பல திரை நட்சிதிரங்கள் சிலாகித்து கூறுவதுண்டு.  அது சட்டமன்றத்தில் பேசுவது முதல்வராக இருந்தாலும் சரி, இந்த பக்கம் எதிர்த்து பேசுவது கேப்டன் விஜயகாந்தாக தான் இருக்கும்.

இதையும் படியுங்களேன் –  முதலில் அஞ்சலி.. இப்போ குட்டி நயன்தாரா.! குறி வைத்து காத்திருக்கும் ‘அந்த’ இளம் நடிகர்.!

இவரை பற்றி அண்மையில், பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, கூறுகையில், ‘ எனக்கு ஒருமுறை ஓர் அரசியல் கட்சியில் இருந்து பிரச்சனை வருவது போல இருந்தது, இதனை அறிந்த கேப்டன் விஜயகாந்த், என்னிடம்,

இதையும் படியுங்களேன் – என்னமா.. இப்படி பண்றீங்களேமா.?! ‘அந்த’ வார்த்தை சொல்லி மொத்த பேரையும் திட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்.! 

சார் அந்த குரூப் அடுத்து உங்களை தான் டார்கெட் செஞ்சிருக்காங்கனு கேள்வி பட்டேன். அப்படி ஏதேனும் உங்கள் மேல் காய் வைத்தால், நான் வருவேன் சார். உங்களை தொட்டால் நான் வருவேன் கவலைப்படாதீங்க.’ என எனக்காக என் பக்கம் நின்றவர் விஜயகாந்த். என மிக பெருமையாக பேசினார் கலைப்புலி தாணு.

Manikandan
Published by
Manikandan