தெலுங்கானா அரசின் உயரிய விருதான பைடி ஜெய்ராஜ் விருது பெற்ற கமல்ஹாசன்

 
தெலுங்கானா அரசின் உயரிய விருதான பைடி ஜெய்ராஜ் விருது பெற்ற கமல்ஹாசன்

தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025 விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான பைடி ஜெய்ராஜ் விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் கமல்ஹாசன் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. சினிமா முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைந்த இந்த விருது, சாகர சங்கமம் மற்றும் சுவாதி முத்யம் போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு கமல் ஹாசன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது.

தெலுங்கானா முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி இந்த விருதை கமல் ஹாசனுக்கு வழங்கினார்.

From Around the web