
Cinema News
நான் சொல்ற கதைலதான் கமல் நடிக்கணும்.. அடம்பிடிக்கும் லிங்குசாமி.. அடுத்து நடப்பது என்ன?..
Published on
உத்தமவில்லன் படத்திற்கான சர்ச்சை தொடர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி. படம் தோல்வி தான். இவர் ஆரம்பத்தில் ஒன்றும் பெரிதாக சொல்லாமல் இப்போது படத்தைப் பற்றி கிளறி இருக்கிறார். இவர் தற்போது தயாரிப்பாளர் சங்கத்திடம் போய் புகார் கொடுத்துள்ளாராம். 50 கோடி பட்ஜெட்ல படம் உருவாச்சு. அதுல நான் 35 கோடி ரூபாய் போட்டுருக்கேன். இதுல 15 கோடி ரூபாயை கமலோட சம்பளமா எடுத்துக்கறேன்.
இதையும் படிங்க… எனக்கு 70 உனக்கு 80.. ‘வேட்டையன்’ செட்டில் இருந்து படுமாஸாக போஸ் கொடுக்கும் சூப்பர் ஸ்டார்கள்
எனக்கு 35 கோடி நஷ்டம். இதனால நாங்க சொல்ற கதைல கமல் சார் நடிக்கணும் என்று சொல்லி இருக்கிறார். இது ரொம்ப ரொம்ப தவறான விஷயம் தான் என்கின்றனர் கமலின் ரசிகர்கள்.
படம் உருவானபோதே கமலுடன் விவாதம் செய்து அவருக்குப் பிடித்த காட்சிகளை மட்டும் எடிட் செய்திருக்கலாம். அப்படி இல்லாமல் ரிலீஸ் பண்ண வேண்டாம் என்று அப்போதே சண்டை போட்டு இருக்கலாம். அதெல்லாம் விட்டு விட்டு அப்போது கமலுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டு அவரோட பேச்சு, எண்ணப்படி நடந்து கொண்டு இப்போது விவாதம் செய்வது முறையல்ல.
முன்னதாக கேஎச்237 கூட லிங்குசாமியுடன் இணைந்து கமல் பண்ணுவதாக இருந்ததாம். அப்போது லிங்குசாமியும் பழைய பிரச்சனைகளைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். ஆனால் இப்போது லிங்குசாமி இப்படி ஒரு புகார் கொடுத்து இருப்பது திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
Uthama Vullain
2015ல் கமல், கிரேசி மோகன் கதை எழுத, ரமேஷ் அரவிந்த இயக்கிய படம் உத்தமவில்லன். கமல், பாலசந்தர், ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தயாரித்தவர்கள் கமல் மற்றும் லிங்குசாமி. படத்தைக் கலைப்படமாக எடுத்துள்ளதால் பெரும்பாலான ரசிகர்களைச் சென்று அடையவில்லை. ஆனால் இது குணா, அன்பே சிவம் போல் காலம் கடந்து பேசப்படும் படமாகவும் இருக்கலாம்.
இந்தப் பிரச்சனையில் கமல் என்ன முடிவு எடுப்பார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கமலைப் பொறுத்தவரை யாரும் அவருக்கு ஆர்டர் போட முடியாது. ஏனென்றால் சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். அவரிடம் போய் நான் சொல்ற கதைல தான் நடிக்கணும் என்று லிங்குசாமி சொல்வது எடுபடுமா என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...