Categories: Cinema News latest news

கமல்ஹாசனிடம் பூவா தலையா போட்டு பார்க்கும் சிவகார்த்திகேயன்.!? இது சரியா வராது.!

கமல்ஹாசன் தற்போது சினிமாவில் தான் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார். கடைசியாக பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியான பெரிய ஹீரோ படங்கள் எதுவும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை முழுதாக பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை.  ஆதலால் தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்து அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் என்றால் அது கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் தான்.

அதே போல தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தனது படங்களை தாண்டி வேறு ஹீரோ படங்களை தயாரிக்கவும் செய்ய உள்ளார். அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாராக உள்ள திரைப்படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் புதிய படம் தான். ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்க உள்ளார்.

ஆனால், சிவகார்த்திகேயன் தற்போது வேறு பிளானில் உள்ளாராம். ஆம், தற்போது தெலுங்கு இயக்குனர் படத்தில் நடித்து முடித்துவிட்டு, அயலான் பட வேளைகளில் களமிறங்க உள்ளாராம்.

இதையும் படியுங்களேன் – பீஸ்ட் மாபெரும் வெற்றிக்கு விருந்து வைத்து அசத்திய விஜய்.! வெளியான பார்ட்டி புகைப்படம்.!

அதனை அடுத்து கே.ஜே.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் சிங்கப்பாதை எனும் படத்தில் நடிக்கலாம் என்கிற யோசனையில் இருக்கிறாரம். அதற்கு இடையில் கமல் தயாரிப்பில் உருவாகும் படத்தில் எப்படி நடிப்பது என யோசித்து வருகிறாராம். தற்போது சிவகார்த்திகேயன் முதலில் சிங்கப்பாதையில் நடிப்பாரா அல்லது கமல் தயாரிப்பில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Manikandan
Published by
Manikandan