அண்ணா வீடு வந்துவிட்டார்... கார்த்தி ட்வீட்டால் நிம்மதியான சூர்யா ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் படம் வாடி வாசல். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில், தனக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டு தற்போது சிகிச்சையில் இருந்து மீண்டு இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என ட்வீட் போட்டு இருந்தார். இது கோலிவுட்டினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்ந்து சூர்யா சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக அவரின் தம்பியும், நடிகருமான கார்த்தி வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் ட்வீட்டில், 'அண்ணன் சூர்யா வீடு திரும்பிவிட்டார். எல்லோரும் நலமாக இருக்கிறோம். இன்னும் சில நாட்கள் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அண்ணன் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Anna is back home and all safe! Will be in home quarantine for a few days. Can’t thank you all enough for the prayers and best wishes!
— Actor Karthi (@Karthi_Offl) February 11, 2021
சில நாட்களாக இந்த கவலையில் இருந்த சூர்யா ரசிகர்கள் தற்போதும் தான் செம ஹாப்பியாக இருப்பதாக இருக்கிறது.