Karthi 30: கதையை மாத்தனுமா? படமே வேண்டாம்- கார்த்தியால் முடிவெடுத்த தயாரிப்பாளர்?
பருத்திவீரன் படம் மூலம் அறிமுகம் ஆனவர் கார்த்தி. முதல் பட வெற்றியே அவரை முன்னணி இடத்தை கொடுத்தது. தொடர்ந்து இவர் நடித்த பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, என தொடர்ந்து வெற்றிப்படஙளை கொடுத்தார். தற்போது அவரது நடிப்பில் சர்தார் 2 வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டடெய்மெண்ட் நிறுவனம் கார்த்தியை வைத்து ஒரு படம் தயாரித்தனர். மேட் வெற்றிப்படத்தை இயக்கிய கல்யாண் ஆனந்த் இயக்கிய அந்த படத்தின் படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெற்ற நிலையில், கார்த்தில் எடுத்தவரை காட்சிகளை பார்க்க வேண்டும் என்றாராம். படக்குழுவும் காண்பித்துள்ளனர். அதனை பார்த்த கார்த்தி இந்த கதை தனக்கு பிடிக்கவில்லை வேறு கதை பார்க்கலாம் என்றாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம் எதற்கு இந்த ரிஸ்க் என்று படத்தையே கேன்சல் செய்ய முடிவெடுத்துவிட்டார்களாம்.
இந்த தகவலி பிர்ரபல யூடியூப் சேனலான வலைபேச்சுவில் கூறினர்.
