">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
முதல் படத்திலேயே லிங்விங் டூ கெதர்… மார்க்கெட்டை இழந்த நவரச நடிகர்….
முதல் படத்திலேயே லிங்விங் டூ கெதர்… மார்க்கெட்டை இழந்த நவரச நடிகர்….
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதா. இப்படத்தில்தான் அவரும் அறிமுகமானார். அப்படத்திலேயே இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆக அப்போதே அவருடன் லிவ்விங் டூ கெதரில் சில வருடங்கள் வாழ்ந்துள்ளார் கார்த்திக்.
திரைத்துறையில் மது, மாது என்கிற பெண் மோகத்தால் சினிமா வாழ்க்கையை சீரழித்துக்கொண்டவர்களில் முக்கியமானவர் கார்த்திக். திறமையான நடிகர். இவருக்கு பல பெண் ரசிகைகளும் இருந்தனர். படப்பிடிப்பிற்கு சரியாக செல்லமாட்டார். இவரை வைத்து படம் எடுத்து முடிப்பதற்குள் தயாரிப்பாளர்களுக்கு வாயில் நுரை தள்ளிவிடும். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு எனில் மதியம் 12 மணிக்குதான் பெட்டில் இருந்து எந்திரிப்பார் கார்த்திக். மது, மாது, படப்பிடிப்புக்கு செல்லாமல் இருப்பது ஆகிய காரணங்களால்தான் மார்க்கெட்டை இழந்தார் கார்த்திக். அக்கா, தங்கை என இருவரையுமே திருமணம் செய்து கொண்டவர்.
அப்போதெல்லாம் அதிகமான படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில்தான் நடைபெறும். சென்னையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் போது இடையில் கோவையில் இறங்கி வேறு எங்கோ சென்றுவிடுவாராம் கார்த்திக். அது எங்கு என சொல்லித்தான் உங்களுக்கு புரியும் என்றில்லை. தன்னை விட வயது அதிகமான சில மூத்த நடிகைகளுடன் உறவில் இருந்துள்ளார் கார்த்திக். இவரின் மகன் கௌதம் கார்த்திக்கும் அப்பாவை போலத்தான். ஒரு நடிகையுடன் லிவ்விங் டூ கெகரில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.