
Cinema News
பராசக்தி படத்தில் வசனம் எழுதவிருந்தது கலைஞர் இல்லை!.. வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்!..
Published on
By
சினிமாவை பொறுத்தவரை ஒரு வாய்ப்பு எப்போது வரும்?. யார் மூலமாக வரும்? என்பதை சொல்லவே முடியாது. யாரோ நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் வேறு ஒரு ஹீரோ நடிப்பார். ஒரு ஹீரோவாவுக்கு சொல்லப்பட்ட கதையில் வேறு ஹீரோ நடிப்பார். ரஜினிக்கு சொல்லப்பட்ட கதையில் கமல் நடிப்பார்.
விஜய்க்கு சொல்லப்பட்ட கதையில் சூர்யா நடிப்பார். இப்படி பலமுறை நடந்திருக்கிறது. அதேபோல்தான் ஒரு படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பும். இப்போதெல்லாம் இயக்குனர்களே வசனங்களை எழுதிவிடுகிறார்கள். ஆனால், 60,70களில் அப்படி இல்லை. வசனம் எழுதுவதற்கென்றே வசனகர்த்தா என ஒருவர் இருப்பார்.
இதையும் படிங்க: கோபத்தில் வாட போடா என பாட்டு எழுதிய கண்ணதாசன்!.. சிவாஜிக்கு அமைந்த ஒரு சூப்பர் ஹிட் பாட்டு!..
சிவாஜி படங்களுக்கு அதிகம் வசனம் எழுதிய ஆருர்தாஸ் என்று சொல்லலாம். அதேபோல், எம்.ஜி.ஆருக்கு கண்ணதாசன், ரவீந்திரன் என சிலர் இருந்தார்கள். எம்.ஜி.ஆர் ஹீரோவாக அறிமுகமான ராஜகுமாரி படத்திற்கு வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதி. அதேபோல், சிவாஜி ஹீரோவாக அறிமுகமான பராசக்தி படத்திற்கும் வசனம் எழுதியது அவர்தான்.
பராசக்தியில் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தது எப்படி சிவாஜிக்கு போராட்டமாக இருந்ததோ கலைஞர் கருணாநிதிக்கும் அப்படித்தான். பராசக்தி திரைப்படம் முதலில் நாடகமாகத்தான் உருவானது. இந்த நாடகத்தை பார்த்த இயக்குனர்கள் கிருஷ்ணன் – பஞ்சு அந்த கதையை சினிமாவாக எடுக்க திட்டமிட்டனர்.
இதையும் படிங்க: சம்பளமே வாங்காமல் சிவாஜி நடித்த திரைப்படம்!… நன்றி உணர்ச்சின்னா அது நடிகர் திலகம்தான்!..
நாடகத்திற்கு வசனம் எழுதிய பாவலர் பாலசுந்தரமே திரைக்கதை, வசனம் எழுதுவது என முடிவானது. ஆனால், இயக்குனர்கள் தரப்பில் சொல்லப்பட்ட சில ஆலோசனைகள் அவர் ஏற்கவில்லை. எனவே, திருவாரூர் தங்கராஜ் என்பவர் வந்தார். சில காரணங்களால் அவரும் விலகிவிட பராசக்தி படத்திற்கு 3வதாக வசனம் எழுத வந்தவர்தான் கலைஞர் கருணாநிதி.
பராசக்தி படம்தான் கலைஞர் கருணாநிதியை ஒரு வசனகர்த்தாவாக ரசிகர்களிடம் பிரலமடைய செய்தது. அதன்பின் பல திரைப்படங்களிலும் அனல் பறக்கும் பகுத்தறிவு வசனங்களை எழுதி தள்ளினார் கலைஞர் கருணாநிதி.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...