">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வீட்டுக்குள் நுழைந்த பாம்பை பக்கெட்டில் பிடித்த கீர்த்தி பாண்டியன்!
பாம்பு பிடித்த கீர்த்தி பாண்டியன்
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது ஹெலன் என்ற மலையாள பட தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இது கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் படப்பிடிப்புகள் ஏதுமின்றி சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்வது, ஏர் உழுவது , நாற்று நடவுவது உள்ளிட்ட வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களின் பார்வையில் தென்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது தன் வீட்டிற்குள் புகுந்த பாம்பு ஒன்றை தைரியமாக பிடித்து அதை அடிக்காமல் கொள்ளாமல் பக்கெட்டில் போட்டு வெளியில் கொண்டு சென்று விட்டுள்ளார். இதனை இன்ஸ்டா ஸ்டோரீஸ்ல் வெளியிட இவரது தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். கீர்த்தி பாண்டியன் ரம்யா பாண்டியனின் தங்கை (சித்தப்பா மகள்) என்பது குறிப்பிடத்தக்கது.