">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கல்யாணம் குறித்து காதுபட பேசிய கீர்த்தி சுரேஷ் – மாப்பிள்ளை ரெடியா?
திருமணம் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் “இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான “மகாநடி” படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு, ” இப்போதெல்லாம் திருமணம் குறித்து எண்ணம் எனக்கு மாறியுள்ளது. காரணம், இதற்கு முன்னர் திருமணம் செய்துக்கொள்வது பற்றி ஒரு விதமான யோசனை இருந்தது.
ஆனால், சமந்தா போன்ற நடிகைகள் சிலர் திருமணத்திற்கு பின்னரும் கேரியரில் தொடர்ந்து சாதித்துக்கொண்டே தான் இருகிறார்கள். இப்படி சொல்வதால் நான் திருமணம் செய்து கொள்வதாக அர்த்தம் இல்லை. திருமணம் மீதான எண்ணம் எனக்கு மாற்றத்தை கொடுத்துள்ளது என தெளிவாக கூறினார்.