Categories: Cinema News latest news

இங்க வா… அழகாய் பந்து விளையாடும் செல்ல குட்டி கீர்த்தி சுரேஷ்.! ஆனா, மண்ட பத்திரம்….

மலையாள சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு தமிழில் இது என்ன மாயம் எனும் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமாகி,  அதன் பின்னர், ரஜினி முருகன், ரெமோ என நடித்து பிரபலமாகி,

அதன் பின்னர் ரஜினிகாந்த், தளபதி விஜய், சூர்யா படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழை விட தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

இவர் தனது சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவர் தனது  செல்ல பிராணியாக நாய் குட்டியுடன் விளையாடும் புகைப்படங்கள் விடியோவை பதிவிட்டு வருவார். இதற்காக தனது செல்ல குட்டி பிராணிக்கு தனி இன்ஸ்டாகிராம் பக்கமே ஆரம்பித்து விட்டார்.

இதையும் படியுங்களேன் – அஜித் மச்சினிச்சிக்கு இப்படி ஒரு திறமையா.?! வாய்பிளக்கும் திரையுலகம்.! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

அப்படி ஆரம்பித்த அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் தனது செல்ல பிராணியுடன் பந்து கொண்டு விளையாடி வருகிறார். அப்போது அந்த பந்தை எடுத்து தலையில் வைத்து கொள்கிறார் உடனே அந்த நாய்க்குட்டி, தலையில் பந்துடன் சேர்த்து தலைமுடியையும் பிய்த்து விட்டது.

அந்த வீடியோ பதிவிட்டு அதற்கு கிழே மண்ட பத்திரம் என எழுதியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாக பரவி வருகிறது.

Manikandan
Published by
Manikandan