">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சூர்யாவுக்கு விருது கொடுக்கணும்.. இல்லனா அவ்ளோதான்.. மிரட்டிய தயாரிப்பாளர்
சூரரைப்போற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் இன்று அமேசன் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
தற்போது இப்படம் பலராலும் பாராட்டுப்பட்டு வருகிறது. குறிப்பாக சூர்யாவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. சுதா கொங்கராவின் இயக்கம் மற்றும் ஜி.வி.பிரகாஷின் இசை படத்தை வேறு தளத்திற்கு எடுத்து செல்வதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.
இப்படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் ஜே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் இப்படம் பற்றி பேசியபோது ‘சூரரைப்போற்று திரைப்படம் எல்லா துறையிலும் உயர பறக்கிறது. ஒரு கோபக்கார வாலிபர், இளம் தொழிலதிபர், அன்பான கணவன் என அனைத்து வேடங்களில் சூர்யா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஜி.வி.பிரகாஷின் இசை வேறு தளத்திற்கு அழைத்து செல்கிறது. அபர்ணாவும், ஊர்வசியும் நடிப்பில் அசத்தியுள்ளனர். இப்படத்தில் சூர்யா மாறாவாகவே வாழ்ந்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய விருது சூர்யாவிற்கு கிடைக்கவில்லை எனில் அவருக்காக போராடுவேன் என பாராட்டியுள்ளார்.