Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தமிழ்நாட்டு மாஃபியா… கே.வி.ஆனந்த் கொடுக்கும் அதிர்ச்சி

அயன் இயக்குனர் கே.வி.ஆனந்த் தமிழ்நாட்டில் இருக்கும் மாஃபியாக்கள் பற்றி படமெடுக்க இருக்கிறார்.�

e84e7917f3e6314ef9828d264db60632

ஒளிப்பதிவாளராக இருந்து அயன் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் கே.வி.ஆனந்த். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், அடுத்தடுத்து படங்களை இயக்கினார். சயின்ஸ் பிக்‌ஷன், மீடியா என பல ஜானர்களில் இவர் எடுத்த படங்கள் வெளியாகின. 

இந்தநிலையில், சிவகார்த்திகேயனோடு கே.வி.ஆனந்த் கைகோர்க்கப்போவதாக ஒரு தகவல் உலவியது. ஆனால், அதை கே.வி.ஆனந்த் மறுத்திருக்கிறார். சிவகார்த்திக்கேயனுக்கு ஏற்ற கதையம்சம் கொண்ட கதை தயாராகும்போது, அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்றும் சொல்லியிருக்கிறார். 

கே.வி.ஆனந்த், தமிழ்நாட்டில் இருக்கும் மாஃபியாக்கள் பற்றி அடுத்த படத்தை எடுக்கப் போகிறார். இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறுகையில், “நாயகன் படம் மும்பையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மாஃபியா இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி மக்களுக்குத்தான் தெரிவதில்லை. தமிழ்நாட்டு மாஃபியா பற்றி ஒரு படம் எடுக்கப் போகிறேன். 

இந்தப் படத்தில் அரசியல்வாதிகள் இருப்பார்கள். ஆனால், அரசியல் படமல்ல. படத்தில் டூயட் கூட இருக்கும். அதற்கான வேலைகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’’ என்று ஹைப் ஏற்றியிருக்கிறார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top