">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஓய்வை அறிவித்துவிட்டு கட்டிப்பிடித்து அழுதோம்.. சுரேஷ் ரெய்னா உருக்கம்….
இந்திய கிரிக்கெட் வரலாற்றை தோனியை தவிர்த்து விட்டு எழுத முடியாது. மிகவும் கூலான கேப்டனாக வலம் வந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் மகேந்திர சிங் தோனி.�
சமீபத்தில் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். ஒரே நாளில் 2 பேரும் ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த ரெய்னா ‘சென்னை சென்றதும் தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்த்தேன். எனவே, நானும் தயாராக இருந்தேன். ஓய்வை அறிவித்துவிட்டு நாங்கள் இருவரும் நீண்ட நேரம் கட்டிப்பிடித்து அழுதோம். அதன்பின் சாவ்லா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், கரண் சர்மா என அனைவரும் ஒன்றாக நேரம் கழித்தோம். எங்களின் எதிர்காலம் மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசினோம்’ எனக் கூறியுள்ளார்.