">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
12 கோடி கொடுத்து வீட்டுக்காவலுக்கு சென்ற விளையாட்டு வீரர்!
ஒரு மாதத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்ட கால்பந்து வீரர் ரொனால்டினோ இப்போது ஜாமீனில் வெளியாகியுள்ளார்.
கால்பந்து வீரரான ரொனால்டினோ பராகுவேவுக்கு வாழ்க்கை சரித புத்தகத்தைப் பிரபலபடுத்துவதற்காக சென்றார். அங்கு அவர் தங்கிய ஹோட்டலில் போலீஸார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட் மோசடி வழக்கில் அவரையும் அவரது சகோதரரையும் கைது செய்தனர்.
அவரது பாஸ்போர்ட்டில் பராகுவே குடிமகன் என எவ்வாறு பதிக்கப்பட்டு இருந்தது எனக் கேள்வி எழுப்பிய போலிஸார் அவரைக் கைது செய்ததாக சொல்லப்பட்டது.இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சிறையில் இருந்த அவர் இப்போது இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய் கொடுத்து ஜாமீனில் வெளியாகியுள்ளார்.
பாரகுவேயில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் நீதிபதி தொலைபேசி மூலமாக ஜாமீன் அளித்து அவரையும் அவரது சகோதரரையும் வீட்டுக்காவலில் வைக்க சொல்லியுள்ளார்.