">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
20 பேரை வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்த முடியாது – சின்னத்திரை சங்கங்கள் அதிருப்தி!
2 மாதங்களுக்கு பிறகு சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அது குறித்து சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
2 மாதங்களுக்கு பிறகு சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அது குறித்து சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகள் மார்ச் 19 ஆம் தேதியில் இருந்து தடை செய்யப்பட்டன. இந்நிலையில் படப்பிடிப்பு ரத்தால் பல தொலைக்காட்சிகள் பழைய தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வந்தன. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜூன் 1 ஆம் தேதி முதல் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.
அதில் முக்கிய நிபந்தனையாக படப்பிடிப்புத் தளத்தில் 20 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என சொல்லப்பட்டது. ஆனால் இந்த நிபந்தனை சாத்தியமில்லாததௌ என சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.. இது சம்மந்தமாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட அவர் ‘ இயக்குனர், நடிகர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் இவர்களின் உதவியாளர்கள் சேர்ந்தாலே 40 பேருக்கு மேல் வந்துவிடும்.’ எனக் கூறியுள்ளார். இதனால் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் ஒரு நாளைக்கை ஒன்றரை எபிசோட்களாக எடுத்தால்தான் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். ஆனா அரசு விதித்துள்ள நிபந்தனைகளில் அதை செய்ய முடியாது’ எனக் கூறியுள்ளார்.