latest news
சினிமா ஆசை காட்டி வீடியோ…. பெண்ணை சீரழித்த வாலிபர்….
கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜிஷ்ணு(28). ஒரு புகைப்பட ஸ்டுடியோவில் வேலை பார்த்து வரும் அவருக்கு அதே பகுதியை சேர்ந்த 38 வயது பெண் பழக்கமாகியுள்ளார்.
அப்பெண்னை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி புகைப்படங்களை எடுத்துள்ளார். அவர்களின் நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் இருப்பதை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதைக்காட்டி அப்பெண்ணை மிரட்டிப் பணம் பறித்து வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென ஒரு லட்சம் பணம் கேட்டு அப்பெண்ணை மிரட்டியுள்ளார். அப்பெண் தர மறுத்ததால் அவரை கடுமையாக தாக்கியதோடு, அவரின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து அப்பெண் சிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். எனவே, ஜிஸ்னுவை போலீசார் கைது செய்து அவரின் செல்போனை பறித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை சிறையிலும் அடைத்தனர்.