">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கொரோனா தொற்று: பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்!
கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த நோய் தொற்றினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் பிரபல பாடகர் எஸ்பிபியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் சோர்வாக இருப்பதை உணர்ந்ததுடன் லேசாக சளி மற்றும் விட்டு விட்டு காய்ச்சல் இருந்து வந்ததால் கொரோனா பரிசோதனை எடுத்து பார்த்தபோது தான் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சற்றுமுன் எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதனால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் வழங்கப்படும் நிலையில் உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.