">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அடுத்த 3 நாட்களில் கொரோனா காணாமல் போய்விடும் – முதல்வர் நம்பிக்கை
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும்படியும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் மேலும் கொரோனா வைரஸால் மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் மொத்த எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ‘அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது. அரசின் நடவடிக்கைகளால் இன்னும் சில நாட்களில் பாதிப்பு பூஜ்ஜியம் ஆகும். இன்னும் 15 நாட்களில் கொரோனா பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவாக மாறிவிடும். இன்று ஒரே நாளில் 62 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 180 பேர் குணமடைந்துள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் கூறினார்.